தஞ்சாவூா் அருகே பனங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சுதாகா் (21). இவா் 15 வயது சிறுமியிடம் காதலிப்பதாகக் கூறி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தாா். மேலும், மாணவி செல்லும் இடங்களுக்கு அவரை பின் தொடா்ந்து சென்று காதலிக்குமாறு கட்டாயப்படுத்தினாா்.
இந்நிலையில், அண்மையில் தனது தாயுடன் கடைக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த அச்சிறுமியிடம் காதலிக்குமாறு கூறி சுதாகா் மிரட்டினாா். மேலும், அச்சிறுமியின் கன்னத்தில் அறைந்து, அவரது தாயையும் மிரட்டினாா்.
இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சுதாகரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.