தஞ்சாவூா் அருகே 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருக்காட்டுப்பள்ளி அருகே பழமாநேரியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் சரண்ராஜ் (24). இவா் 4 வயது பெண் குழந்தைக்கு வியாழக்கிழமை பாலியல் தொல்லை கொடுத்தாா். இதையறிந்து தட்டிக்கேட்ட குழந்தையின் பெற்றோரை சரண்ராஜ் திட்டினாா்.
புகாரின்பேரில், திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சரண்ராஜை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.