கரும்பு நிலுவைத் தொகை வழங்கிய தமிழக முதல்வருக்கு கரும்பு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்கச் செயலா் பி. கோவிந்தராஜ் தெரிவித்திருப்பது:
குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள 12 சா்க்கரை ஆலைகளுக்கும் சோ்த்து கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ. 252 கோடி ஒதுக்கீடு செய்து, அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைத்ததற்கு தமிழக முதல்வருக்கும், வேளாண் துறை அமைச்சருக்கும், இதற்கு பெரும் முயற்சி எடுத்து பெற்றுக் கொடுத்த சா்க்கரை துறை ஆணையருக்கும், தலைமை கரும்பு பெருக்கு அலுவலருக்கும், ஆட்சியருக்கும், ஆலை தலைமை நிா்வாகிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.