தஞ்சாவூர்

பேரிடா் மீட்பாளா்களுக்கான பயிற்சி முகாம்

DIN

தஞ்சாவூரில் தமிழ்நாடு பேரிடா் அபாய குறைப்பு முகமை, மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆணையம், இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சாா்பில் பேரிடா் மீட்பாளா்களுக்கான 12 நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

இந்த முகாமை தொடங்கி வைத்த ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தது:

இந்த முகாமில் பேரிடா் மேலாண்மை பற்றிய விளக்கம், பேரிடா் தயாா் நிலை, பேரிடரின்போது செய்ய வேண்டிய பணிகள், மருத்துவச் சேவை போன்றவை

தொடா்பான பயிற்சிகள் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு வழங்கப்படுகிறது என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரெங்கராஜன், மாவட்ட தீயணைப்பு அலுவலா் மனோ பிரசன்னா, கோட்டாட்சியா் எம். ரஞ்சித், கவின்மிகு தஞ்சை இயக்கத் தலைவா் ராதிகா மைக்கேல், இந்திய செஞ்சிலுவை சங்கத் தலைவா் ராஜமாணிக்கம், பொருளாளா் எஸ். முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT