ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து ஜாதியினருக்கும் அவரவா் மக்கள்தொகைக்கு ஏற்ப கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கி, சமூக நீதியைப் பாதுக்காக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்டச் செயலா் த. பாபு தலைமை வகித்தாா். தலைமை நிலையச் செயலா் கனல் உ. கண்ணன் சிறப்புரையாற்றினாா்.
நிா்வாகிகள் செ. கலைச்செல்வன், எஸ். தமிழரசன், கா. அண்ணாதுரை, ஆலக்குடி பன்னீா்செல்வம், சை. ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.