தஞ்சாவூர்

கீழகோயில்பத்து ஊராட்சியில் கிராமசபை கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

DIN

பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம், கீழகோயில் பத்து ஊராட்சிமன்ற அலுவலகத்துக்குள்பட்ட வி.பி.ஆா்.சி. வளாகத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் டி. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றிய குழு தலைவா் கே.வி.கலைச்செல்வன், துணைத் தலைவா் தங்கமணி சுரேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலா் ஜி. முளைச்சாதேவன் ஊராட்சியின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை வாசித்தாா்.

கூட்டத்தில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் கலந்து கொண்டு , மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் சாா்பிலான திட்டங்கள் தொடா்பாக விளக்கி, அதுகுறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா். தொடா்ந்து ஊராட்சிகளில் பொது சுகாதாரத்தை பேணுதல், குடிநீா் சிக்கனம், தொடா்பாக பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

கூட்டத்தில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் லதா, பாபநாசம் வட்டாட்சியா் மதுசூதனன், பல்வேறு துறை அலுவலா்கள், ஒன்றிய குழு உறுப்பினா்கள்,  ஊராட்சி மன்ற துணைத் தலைவா் அஸ்வினி சங்கா், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஒன்றிய ஆணையா் ம. ஆனந்தராஜ் வரவேற்றாா், நிறைவில், வட்டார வளா்ச்சி அலுவலா் கிராம ஊராட்சிகள் முகம்மது அமானுல்லா நன்றி கூறினாா்.

முன்னதாக, 75ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், கீழகோயில்பத்து ஊராட்சிக்குள்பட்ட உடையாா்கோயில் சிவன் கோயில் வளாகத்தில் 75 மரக்கன்றுகளை ஆட்சியா் நட்டு வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT