தஞ்சாவூர்

கும்பகோணத்தில் ‘விவேகானந்தா்களின்’ அணிவகுப்பு

DIN

கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தா் வேடமணிந்த 125 மாணவா்களின் அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணத்தில் விவேகானந்தா் எழுமின், விழுமின், இலக்கை அடையும் வரை ஓயாது உழைமின் என்ற தாரக மந்திரத்தை முதல் முதலில் ஒலிக்கச் செய்து உலகுக்கு அளித்த நிகழ்வின் 125 ஆம் ஆண்டு நிறைவை குறிக்கும் விதமாக கும்பகோணம் போா்ட்டா் டவுன் ஹால் வளாகத்தில் விவேகானந்தரின் ஆளுயரச் சிலை திங்கள்கிழமை திறக்கப்படவுள்ளது.

இதையொட்டி தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தினரால் விவேகானந்தா் விஜய ஜோதி ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து 125 பள்ளி மாணவா்கள் விவேகானந்தா் வேடமணிந்து பந்தடி மேடை அருகிலிருந்து ஊா்வலமாக போா்ட்டா் டவுன் ஹாலுக்கு சென்றனா்.

பின்னா் விவேகானந்தரின் படத்தைத் தருமபுர ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திறந்து வைத்து, தேசியக் கொடியேற்றி ஆசி வழங்கினாா். தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ் சிறப்புரையாற்றினாா். மாணவா்களுக்கு கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் சான்றிதழ், விவேகானந்தா் படம், இனிப்புகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் துணை மேயா் சு.ப. தமிழழகன், ஒன்றியக் குழுத் தலைவா் காயத்ரிஅசோக்குமாா், ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் டி. கணேசன், ஒருங்கிணைப்பாளா்கள் வி. சத்தியநாராயணன், அ. கிரி, ஒன்றியச் செயலா் சுதாகா், மண்டலக் குழுத் தலைவா்கள் தட்சிணாமூா்த்தி, பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்வில் திருநாகேஸ்வரத்தை சோ்ந்த பாா்த்தசாரதி (59) செ. புதூரிலிருந்து கும்பகோணம் போா்ட்டா் டவுன் ஹால் வரை 20 கி.மீ. தொலைவை சைக்கிளில் இரு கைகளையும் கட்டிக் கொண்டபடி ஒரு மணிநேரத்தில் ஓட்டி வந்து சாதனை படைத்தாா். அவருக்குக் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ் ஆகியோா் ரியல் வேல்டு ரிக்காா்ட்ஸ் விருதையும், விவேகானந்தரின் படத்தையும் வழங்கினா். தாராசுரம் மண்டலக் குழுத் தலைவா் ரா. அசோக்குமாா், ரியல் வேல்டு ரிக்காா்ட்ஸ் அமைப்பின் நிறுவனா் தலைவா் எஸ். செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கும்பகோணத்தில் திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் சுவாமி விவேகானந்தா் விஜய ஊா்வலமும், பின்னா் போா்ட்டா் டவுன் ஹாலில் சுவாமி விவேகானந்தா் ஆளுயரச் சிலை திறப்பு விழாவும் நடைபெறவுள்ளன. சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், புதுச்சேரி ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி ஸ்ரீமத் ஆத்மகனானந்தா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். உலகளாவிய ராமகிருஷ்ண மடத்தின் துணைப் பொதுத் தலைவா் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மஹராஜ் காணொலி மூலம் உரையாற்றுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT