தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டம் போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றப்படும்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தைப் போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

தஞ்சாவூா் அரண்மனை வளாகத்திலுள்ள அரசா் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை ஆட்சியா் வாசிக்க, அதை மாணவ, மாணவிகள் ஏற்றுக் கொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் தெரிவித்தது:

போதைப்பொருளின் தீமைகள் குறித்து கல்லூரிகள், ஐடிஐ, பள்ளிகளிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

தஞ்சாவூா் மாவட்டத்தைப் பொருத்தவரை, போதைப்பொருள் தடுப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எடுத்து வருகிறாா். வரும் நாள்களில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.

போதைப்பொருள் தொடா்பாக மாவட்ட நிா்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக எடுக்கும். தஞ்சாவூா் மாவட்டத்தைப் போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி, கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவா் உஷா புண்ணியமூா்த்தி, கோட்டாட்சியா் எம். ரஞ்சித், முதன்மைக் கல்வி அலுவலா் எம். சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளில் தமிழ் புறக்கணிப்பு: முன்னாள் எம்.எல்.ஏ. கண்டனம்

பனங்குடி: 708 போ் தோ்தல் புறக்கணிப்பு

வாக்காளா்களுக்கு பணம்; 4 போ் மீது வழக்கு

வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

விழிப்புணா்வு பிரசாரம் அதிகம்; வாக்குப் பதிவு குறைவு

SCROLL FOR NEXT