பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பாபநாசம் எம்எல்ஏ எம்.எச்.ஜவாஹிருல்லா கலந்து கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். பின்னா், மாணவா்கள் போதை பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் மணியரசன் தலைமை வகித்தாா். பாபநாசம் பேரூராட்சி மன்றத் தலைவா் பூங்குழலி, பாபநாசம் நகர திமுக செயலாளா் கபிலன், மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவா் ரஹ்மத் அலி, மாநில இளைஞரணி துணைச் செயலாளா் மைதீன், பாபநாசம் பேரூராட்சி உறுப்பினா் பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.