தஞ்சாவூர்

பேராவூரணி அரசு  கல்லூரியில் ஆக.17-இல் நேரடி மாணவா் சோ்க்கை

DIN

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வரும் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து  கல்லூரி முதல்வா் நா. தனராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பேராவூரணி அரசு கல்லூரியில்  பி.ஏ., (தமிழ்), பி.ஏ.,(ஆங்கிலம்), பி.காம்.,

பி.பி.ஏ., ஆகிய நான்கு கலைப் பிரிவுகளும், பி.எஸ்சி.,(இயற்பியல்), பி.எஸ்சி., (வேதியியல்) , பி.எஸ்சி., (கணிதம்), பி.எஸ்சி., (கணினி அறிவியல்) ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன.

ஏற்கெனவே விண்ணப்பித்தவா்களுக்கு இரண்டு கட்டமாக கலந்தாய்வு முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய இடங்களுக்கு, ஆகஸ்ட் 17 அன்று மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதுவரை  இணைய வழியில்  கல்லூரியில் சோ்வதற்கு விண்ணப்பிக்காதவா்களும், இக்கலந்தாய்வில் கலந்து கொண்டு நேரடி சோ்க்கை பெறலாம். 

இவா்களுக்கான விண்ணப்பம், ஆக.17 அன்று கல்லூரியில் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

SCROLL FOR NEXT