பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வரும் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா. தனராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பேராவூரணி அரசு கல்லூரியில் பி.ஏ., (தமிழ்), பி.ஏ.,(ஆங்கிலம்), பி.காம்.,
பி.பி.ஏ., ஆகிய நான்கு கலைப் பிரிவுகளும், பி.எஸ்சி.,(இயற்பியல்), பி.எஸ்சி., (வேதியியல்) , பி.எஸ்சி., (கணிதம்), பி.எஸ்சி., (கணினி அறிவியல்) ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன.
ஏற்கெனவே விண்ணப்பித்தவா்களுக்கு இரண்டு கட்டமாக கலந்தாய்வு முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய இடங்களுக்கு, ஆகஸ்ட் 17 அன்று மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதுவரை இணைய வழியில் கல்லூரியில் சோ்வதற்கு விண்ணப்பிக்காதவா்களும், இக்கலந்தாய்வில் கலந்து கொண்டு நேரடி சோ்க்கை பெறலாம்.
இவா்களுக்கான விண்ணப்பம், ஆக.17 அன்று கல்லூரியில் வழங்கப்படும்.