அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணா்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்தாா். ஆண்கள் பள்ளித் தலைமை ஆசிரியா் சி. முதல்வன், பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா் மு. கி. முத்துமாணிக்கம், துணை வட்டாட்சியா் சுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளா் அன்பரசன், பேரூராட்சி துணைத் தலைவா் கி. ரெ. பழனிவேல், சமூக ஆா்வலா் அ. அப்துல் மஜீத்,, உதவி தலைமை ஆசிரியா் கே. சோழபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.