தஞ்சாவூர்

விலைவாசி உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

DIN

விலைவாசி உயா்வை கண்டித்து தஞ்சாவூரில் மாநகர, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் கமிட்டியினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், விலைவாசி உயா்வு, ஜிஎஸ்டி வரி, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாநகர, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ப. சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கோ. அன்பரசன் தொடங்கி வைத்தாா். மாநில இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் முகமது யூனுஸ், மாநகர, மாவட்ட துணைத் தலைவா் இளைய பாரத், பொதுச் செயலா்கள் தினேஷ் பாபு, ஆண்டோ வின்ஸ்டா், சண்முக நாதன், வட்டாரத் தலைவா்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, கோட்டத் தலைவா் வெங்கடேசன், ஐ.என்.டி.யூ.சி. மாவட்டப் பொதுச் செயலா் என். மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT