தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 750 கிலோ குட்கா பறிமுதல்: இளைஞா் கைது

DIN

தஞ்சாவூரில் 750 கிலோ குட்கா மூட்டைகளைப் பறிமுதல் செய்து, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி குற்றங்களை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கா்நாடகத்திலிருந்து தஞ்சாவூருக்கு குட்கா பொட்டலங்கள் கடத்தி வரப்படுவதாக உதவி ஆய்வாளா் ராஜேஷ் தலைமையிலான தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து, கரந்தை பகுதியில் தனிப்படையினா் திங்கள்கிழமை வாகன சோதனை நடத்தினா். இதில், ஒரு காரில் சோதனையிட்டபோது 750 கிலோ குட்கா மூட்டைகள், 110 பெங்களூரு வகை மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. பின்னா், குட்கா மூட்டைகள், மது பாட்டில்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவற்றை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, இக்கடத்தலில் ஈடுபட்டதாக கரந்தை கொடிக்காரத் தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகன் பிரபு (29) கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் சிறப்பாகப் பணியாற்றிய தனிப்படையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

கழுகுமலை அருகே பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி மக்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

SCROLL FOR NEXT