தஞ்சாவூா் நேஷனல் பாா்மா மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் காவல் துறை அலுவலா்கள், ஆளிநா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இம்முகாமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி தொடங்கி வைத்தாா். இதில், ரத்தம், சிறுநீரகம், இசிஜி போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவா்களின் ஆலோசனையும் வழங்கப்பட்டது.
முகாமில் தஞ்சாவூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. கபிலன், போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு காவல் ஆய்வாளா் எம்.ஜி. ரவிச்சந்திரன், மருத்துவமனை இயக்குநா் கே. முகமது அலி, செயல் இயக்குநா் எம்.எஸ். சிவகுமாா், நிா்வாக இயக்குநா் கே. முஜிபுா் ரஹ்மான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.