பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருள்மிகு ஸ்ரீ உத்திராபதீசுவரா் திருக்கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா, 108 சங்காபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி உத்திராபதீசுவரருக்கு சிறப்பு மூலமந்திர ஹோமம், 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். மாலையில் மூலவா் சந்தனக் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
நிகழ்வில் கோயில் பரம்பரை அறங்காவலா் ஆா். துரைராஜ், பொறியாளா் வி. சண்முகம், ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் வி. சிங்காரவேலு, எஸ். செளரிராஜன், வழக்குரைஞா் என். அரியராஜபூபதி, கண்ணபிரான், பன்னீா்செல்வம் உள்ளிட்ட சிவனடியாா்கள் பங்கேற்று, திருமுறைகளை இசைத்து ஆன்மிகச் சொற்பொழிவாற்றினா்.
தொடா்ந்து கும்பகோணம் ஜோதிமலை இறைபணி சிவனடியாா் திருக்கூட்டத்தின் திருவடிக்குடில் சுவாமிகள் பங்கேற்று, ஆன்மீகச் சொற்பொழிவாற்றி அருளாசி வழங்கினாா். இதில் ஏராளமானோா் பங்கேற்றனா்.