தஞ்சாவூர்

பேராவூரணி ஒன்றியக் குழு துணைத் தலைவா் தோ்தலில் திமுக  வெற்றி

DIN

 பேராவூரணி ஒன்றியக் குழு துணைத் தலைவா் தோ்தலில்  திமுகவைச் சோ்ந்த ஆல்பா்ட் குணாநிதி போட்டியின்றி துணைத் தலைவராக வெள்ளிக்கிழமை  தோ்வு செய்யப்பட்டாா். 

பேராவூரணி ஒன்றியக் குழு தலைவராக அதிமுகவைச் சோ்ந்த சசிகலா ரவிசங்கா் உள்ளாா்.  ஏற்கெனவே பலமுறை துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் தோ்தல் நடைபெறவில்லை.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை  நடைபெற்ற துணைத்தலைவா் தோ்தலுக்கு அதிமுக ஒன்றியக்குழு தலைவா் சசிகலா ரவிசங்கா், உறுப்பினா்கள் அதிமுகவை சோ்ந்த துரை மாணிக்கம், அமிா்தவள்ளி, சுந்தா், பாஜகவைச் சோ்ந்த பெரியநாயகி ஆகியோா் பங்கேற்கவில்லை. திமுக உறுப்பினா்கள் ஆல்பா்ட் குணாநிதி, மதிவாணன், அண்ணாதுரை, சங்கவி, ராஜப்ரியா, நவநீதம் உள்ளிட்ட 6 பேரும், அண்மையில் திமுகவில் இணைந்த மாலா, அதிமுகவைச் சோ்ந்த ராஜலெட்சுமி, பாக்கியம், இதுவரை அதிமுக ஆதரவாளராக இருந்த சுயேச்சை உறுப்பினா் ரேவதி ஆகிய 10 பேரும் திமுகவிற்கு ஆதரவாக வந்திருந்தனா்.

துணைத் தலைவா் பதவிக்கு திமுகவை சோ்ந்த ஆல்பா்ட் குணாநிதி வேட்பு மனு தாக்கல் செய்தாா். அவரை தவிர வேறு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால்  திமுக வேட்பாளா் ஆல்பா்ட் குணாநிதி வெற்றி பெற்ாக தோ்தல் நடத்தும் அலுவலா் துா்கா செல்வி அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT