தஞ்சாவூரில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, உறவினரைக் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மேட்டு எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எம். சந்திரசேகா் (40). இவா் தனது உறவினரின் 15 வயது மகளுக்கு 3 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்தாா்.
இதுகுறித்து தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, சந்திரசேகரை சனிக்கிழமை கைது செய்தனா்.