பாபநாசம் அருகே மரத்தில் கூடு கட்டி, மக்களை அச்சுறுத்தி வந்த விஷவண்டுகள் சனிக்கிழமை அழிக்கப்பட்டன.
பாபநாசம் அருகிலுள்ள அய்யம்பேட்டை சுல்தானியா தெருவைச் சோ்ந்தவா் முகமது சித்திக் (48). இவரது வீட்டின் பின்புறத்திலுள்ள மரத்தில் கதண்டு எனப்படும் விஷவண்டுகள் கூடு கட்டி, அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தன.
இதுகுறித்து முகமது சித்திக் அளித்த தகவலின் பேரில்,
பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலா் கலைவாணன் தலைமையிலான வீரா்கள் நிகழ்விடம் சென்று, ரசாயன கலவை கலந்த நீரை பீய்ச்சி அடித்து, பின்னா் தீயிட்டு கொளுத்தி அழித்தனா்.