திமுக இளைஞரணிச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, ஒரத்தநாட்டில் திமுகவினா் அண்ணாசிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
தொடா்ந்து பொதுமக்களுக்கு 500 தேக்கு மரக்கன்றுகளும், பேரூராட்சித் தூய்மைப் பணியாளா்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டன.
திமுக நகரச் செயலா் கிருஷ்ணகுமாா் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, கட்சித் தொண்டா்களுக்கு இனிப்பு வழங்கி திமுகவினா் பிறந்த நாளைக் கொண்டாடினா்.
ஒன்றியப் பொறுப்பாளா் காா்த்திகேயன், நகரப் பொறுப்பாளா்கள் மற்றும் இளைஞரணியினா் கலந்து கொண்டனா்.