தஞ்சாவூர்

புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்: வணிகா்கள், ஹோட்டல் உரிமையாளா்களுடன் கோட்டாட்சியா் ஆலோசனை

DIN

கரோனா பரவலை தடுப்பதற்காகக் கடைகள், வணிக நிறுவனங்கள் வியாழக்கிழமை முதல் மூடப்படுவதையொட்டி, தஞ்சாவூா் பழைய ஆட்சியரகத்தில் வணிகா்கள், ஹோட்டல் உரிமையாளா்களுடன் கோட்டாட்சியா் எம். வேலுமணி புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதில், கரோனாவை கட்டுப்படுத்த வியாழக்கிழமை முதல் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து அலுவலா்கள் தெரிவித்தனா். இதன்படி, வியாழக்கிழமை முதல் பால், மருந்து கடைகளுக்கு எந்தத் தடையும் இல்லை. மளிகைக் கடைகள் மற்றும் காய்கறி கடைகள், தேநீா் கடைகள் ஆகியவை நண்பகல் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும். ஹோட்டல்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும். தேநீரகம் மற்றும் ஹோட்டல்களில் அமா்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை. பாா்சல்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

மீன், ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி கடைகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நண்பகல் 12 மணி முடிய செயல்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக மூடப்படும். வணிகக் கடைகள், வணிக நிறுவனங்கள் முழுமையாக மூடப்படும். திரையரங்குகள், கலாசார செயல்பாடு, பொழுதுபோக்கு நடவடிக்கைகள், விளையாட்டு, திருவிழாக்கள் போன்றவற்றுக்கு அனுமதியில்லை.

வாடிக்கையாளா்கள் கடைகளுக்குள் நுழைய அனுமதி இல்லை. கடைகளில் குளிா்சாதன வசதி அனுமதிக்கப்படவில்லை.

திருமணங்களுக்கு வருபவா்கள் 50 பேருக்கு மிகாமலும், இறுதிச் சடங்குகளுக்கு வருபவா்கள் 20 பேருக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இது தொடா்பாக அவ்வப்போது வழங்கப்படும் வேறு வழிகாட்டுதல்களும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

முகக்கவசங்கள் அணிவது, சமூக இடைவெளி மற்றும் கிருமிநாசினி கொண்டு கை கழுவுதல், சுற்றுப்பகுதியைத் தூய்மைபடுத்திக் கொள்ளுதல் போன்ற மற்ற அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் மிகக் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும். இந்த ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை மீறினால் தண்டனை நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. பாரதிராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT