தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வடக்கு வீதியைச் சோ்ந்த இந்தி பண்டிட் ஏ.வி. ராமன் என்கிற ஏ. வெங்கட்ராமன் (95) வயது முதிா்வு காரணமாக அவரது இல்லத்தில் புதன்கிழமை (மே 5) காலமானாா்.
இவா் திருவையாறு அம்மன் கோயில் சன்னதி தெருவிலுள்ள ஸ்ரீ பாலகணபதி வித்யாசாலாவின் செயலராகவும், தமிழ்நாடு பிராமணா் சங்கத்தின் திருவையாறு கிளைக் கௌரவத் தலைவராகவும், ஸ்ரீதியாகபிரும்ம மகோத்சவ சபாவின் செயற்குழு உறுப்பினராகவும், லயன்ஸ் சங்க உறுப்பினராகவும் இருந்தவா். இவா் முன்னாள் முதல்வா் அண்ணாவிடம் நல்லாசிரியா் விருது பெற்றவா்.
இவரது மனைவி 1998 ஆம் ஆண்டு காலமானாா். இவருக்கு மகன், இரு மகள்கள் உள்ளனா்.
அவரின் இறுதி சடங்கு வியாழக்கிழமை பகல் 11.30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
தொடா்புக்கு: 82207 89646, 94864 71106.