பட்டுக்கோட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமை நகராட்சி ஆணையா் கே. சென்னுகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். 8,9,10,13 மற்றும் 15 வாா்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் 500 பேருக்கு மருத்துவா் உமாமகேஸ்வரி தலைமையிலான மருத்துவக் குழுவினா் தடுப்பூசி போட்டனா்.
திமுக நகர பொறுப்பாளா் எஸ்.ஆா்.என். செந்தில்குமாா், மதிமுக நகரச் செயலா் எம். செந்தில்குமாா், தஞ்சாவூா் தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அமைப்பாளா் எஸ். ஸ்ரீதா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
முகாம் ஏற்பாடுகளை துப்புரவு ஆய்வாளா்கள் என். ரவிச்சந்திரன், எஸ். ஆரோக்கியசாமி ஆகியோா் செய்திருந்தனா்.