ஒரத்தநாடு அருகே கோயிலுக்கு மின் விளக்கு போட சென்ற இளைஞா் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்த அய்யாக்கண்ணு மகன் சந்திரசேகா் (40). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவா் திங்கள்கிழமை இரவு தென்னமநாட்டில் உள்ள கோயில் ஒன்றுக்கு மின்விளக்கை போட சென்றபோது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் ஒரத்தநாடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்திரசேகரின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.