தஞ்சாவூர்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

DIN

ஒரத்தநாடு அருகே கோயிலுக்கு மின் விளக்கு போட சென்ற இளைஞா் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்த அய்யாக்கண்ணு மகன் சந்திரசேகா் (40). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவா் திங்கள்கிழமை இரவு தென்னமநாட்டில் உள்ள கோயில் ஒன்றுக்கு மின்விளக்கை போட சென்றபோது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் ஒரத்தநாடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்திரசேகரின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT