தஞ்சாவூர்

சாலை விபத்து: இளைஞா் பலி

DIN

தஞ்சாவூரில் திங்கள்கிழமை வீட்டுச் சுவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மோத்திரப்பசாவடியைச் சோ்ந்த முனுசாமி மகன் விக்னேஷ்வரன் (27). இவா் திங்கள்கிழமை அதிகாலை அப்பகுதியிலுள்ள பட்டுக்கோட்டை முதன்மைச் சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் வீட்டுச் சுவா் மீது மோதியதில் கீழே விழுந்தாா். பலத்தக் காயமடைந்த விக்னேஷ்வரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தஞ்சாவூா் நகரப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT