தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோவில் காடவராயன்குளம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மணி (35). இவா் வியாழக்கிழமை இரவு மாரியம்மன் கோவில் பகுதியிலிருந்து தஞ்சாவூா் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்பகுதியிலுள்ள பள்ளி அருகே சென்ற இவரது மோட்டாா் சைக்கிள் மீது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த மணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.