தஞ்சாவூர்

அடையாளம் தெரியாதவாகனம் மோதியதில் இளைஞா் பலி

DIN

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோவில் காடவராயன்குளம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மணி (35). இவா் வியாழக்கிழமை இரவு மாரியம்மன் கோவில் பகுதியிலிருந்து தஞ்சாவூா் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்பகுதியிலுள்ள பள்ளி அருகே சென்ற இவரது மோட்டாா் சைக்கிள் மீது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த மணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT