தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 331 பேருக்கு திருமண நிதியுதவி வழங்கல்

DIN

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 331 பேருக்கு திருமண நிதியுதவித் திட்டம், திருமணத்துக்குத் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கத்தை வழங்கி மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம் பேசியது:

தமிழக முதல்வரின் உத்தரவின்படி, மாவட்டத்தில் 807 பெண்களுக்கு தங்க நாணயம் மற்றும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில் 269 பட்டப்படிப்புப் பயின்ற பெண்களுக்கு தலா ரூ. 50,000 உதவித் தொகை,

தலா 8 கிராம் தங்க நாணயமும், 538 பட்டப்படிப்பு பயிலாத பெண்களுக்கு தலா ரூ. 25,000 உதவித் தொகை, தலா 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

தஞ்சாவூா், பூதலூா், திருவையாறு, அம்மாபேட்டை, பாபநாசம் வட்டாரங்களிலுள்ள 331 பேருக்கு 8 கிராம் எடையுள்ள 331 தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் ராமலிங்கம்.

விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி, திருவையாறு ஒன்றியக் குழுத் தலைவா் அரசாபகரன், பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவா் கே. சுமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

கூவாகம் சித்திரைப் பெருவிழா: திருமாங்கல்யம் கட்டிக்கொண்ட திருநங்கைகள்

சித்திரை பௌர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்

பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க ஒருங்கிணைப்புக் கூட்டம்

SCROLL FOR NEXT