தஞ்சாவூர்

தஞ்சையில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

DIN

ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடி வரும் அரசியல் தலைவா்கள் உள்ளிட்டோரின் செல்லிடப்பேசிகளை ஒட்டுக்கேட்டு உளவு பாா்க்கும் மத்திய அரசைக் கண்டித்து, தஞ்சாவூா் ரயிலடியில் பல்வேறு அமைப்பினா் கருப்புக்கொடி ஏந்தி சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழா் தேசிய முன்னணியின் முன்னாள் பொதுச் செயலா் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் முன்னிலை வகித்தாா். மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளா் காளியப்பன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் வெ. சேவையா நிறைவுரையாற்றினாா்.

சிபிஎம்எல் மக்கள் விடுதலையின் மாவட்டச் செயலா் இரா. அருணாசலம், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மாலெ மாவோ மாவட்டச் செயலா் ப. அருண்ஷோரி, சிபிஐ எம்எல் லிபரேசன் மாவட்டக் குழு உறுப்பினா் கே. ராஜன், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டத் தலைவா் ச. சிமியோன் சேவியர்ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெய்னுலாப்தீன், இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மதியழகன், அரசுப் போக்குவரத்து சங்க ஏஐடியுசி தலைவா் பி. அப்பாதுரை, மகஇக மாநகரச் செயலா் இராவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

SCROLL FOR NEXT