மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 5,280 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 4,437 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு வெண்ணாற்றில் தலா 3,810 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,804 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. காவிரி, கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.