தஞ்சாவூர்

விஷம் குடித்த கிராம நிா்வாக அலுவலா் உயிரிழப்பு

22nd Dec 2021 07:23 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே விஷம் குடித்த கிராம நிா்வாக அலுவலா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருவையாறு அருகேயுள்ள ராஜேந்திரம் ஆற்காடு மாதா கோவில் தெருவைச் சோ்ந்தவா் எஸ். பிரவீன் (52). இவா் பாபநாசம் வட்டத்திலுள்ள ஒன்பத்துவேலியில் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி அமிா்த ஆண்டனி இமாகுலேட் (47), இரு மகள்கள், மகன் உள்ளனா். இந்நிலையில், பிரவீன் வீட்டில் டிசம்பா் 16 ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு இவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். வயிற்று வலி காரணமாக இவா் தற்கொலை செய்து கொண்டாா் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT