ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய பொக்லைன், லாரி உள்பட 7 வாகனங்களை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஆலங்குடி அருகேயுள்ள மழையூா் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, மழையூா் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலானோா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, முனீசுவரா் கோயில் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 2 பொக்லைன் இயந்திரம், 4 லாரி, 1 டிராக்டரைப் பறிமுதல் செய்து மழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.