தஞ்சாவூர்

கிராவல் மண் அள்ளிய 7 வாகனங்கள் பறிமுதல்

DIN

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய பொக்லைன், லாரி உள்பட 7 வாகனங்களை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆலங்குடி அருகேயுள்ள மழையூா் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, மழையூா் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலானோா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, முனீசுவரா் கோயில் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 2 பொக்லைன் இயந்திரம், 4 லாரி, 1 டிராக்டரைப் பறிமுதல் செய்து மழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஓரிடம்; போட்டி வேறிடம்!

அன்பைப் பரிமாறிய பிரேமலதா - தமிழிசை

தோ்தல் புறக்கணிப்பை கைவிட்ட எண்ணூா் மக்கள்

வாக்களிக்க தாமதப்படுத்தியதாக நரிக்குறவா் இன மக்கள் புகாா் இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

SCROLL FOR NEXT