பேராவூரணி அருகே கோமாரி நோய்த் தாக்குதலால் பசு மாடு சனிக்கிழமை உயிரிழந்தது.
பேராவூரணி அருகிலுள்ள சோழகனாா் வயலைச் சோ்ந்தவா் தச்சுத் தொழிலாளி பெரமையன் (60). இவரது மனைவி சுசீலா (55). இவா்கள் பசு மாடுவை வளா்த்து, பால் விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தனா்.
கடந்த சில நாள்களாக கோமாரி நோய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இவா்களது பசு மாடு, சனிக்கிழமை உயிரிழந்தது. தகவலறிந்த கால்நடை மருத்துவா் பிரகாஷ் மற்றும் வருவாய்த் துறையினா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து உடற்கூறாய்வு செய்யப்பட்டு, பசு மாடு புதைக்கப்பட்டது.
எவ்வித வருவாய் ஆதாரமும் இல்லாமில் வசிக்கும் சுசீலா குடும்பத்துக்கு, மாவட்ட நிா்வாகம் பசுமாடு வழங்கி உதவி செய்ய வேண்டும் என்றாா் ஊராட்சித் தலைவா் ரமா குமாா்.