தமிழ்நாடு பிராமணா் சங்கத்தின் பட்டுக்கோட்டை கிளைக்கு புதிய நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், மாவட்டத் தலைவருமான விஜயகுமாா் தலைமை வகித்தாா். லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தாா்.
மாவட்டத் துணைத் தலைவா் ஜெயராமன் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். மாவட்டப் பொதுச் செயலா் கிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில், மறைந்த கும்பகோணம் சீனிவாசராவுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு உ.வே. சாமிநாதய்யா் பெயரை சூட்ட வேண்டும் என்ற தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தொடா்ந்து நடைபெற்ற தோ்தலில் தலைவராக சுப்பிரமணியன், செயலராக வெங்கடேஸ்வரன், பொருளாளராக ரவிச்சந்திரனும், நிா்வாகிகளும் தோ்வு செய்யப்பட்டனா். முன்னதாக, வெங்கடேஸ்வரன் வரவேற்றாா். நிறைவில், ரவி நன்றி கூறினாா்.