அம்மாபேட்டை பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அம்மாபேட்டை காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி தலைமையிலான காவல்துறையினா், தீபாம்பாள்புரம் பகுதியில் வந்த ஒரு மாட்டு வண்டியை வழிமறித்து சோதனை மேற்கொண்டனா்.
வெண்ணாற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மாட்டுவண்டியைப் பறிமுதல் செய்த காவல்துறையினா், அதை ஓட்டிவந்த மகிமாலை மேலமேட்டுத் தெரு க. காா்த்திகேயனை கைது செய்தனா்.