தஞ்சாவூரில் வீட்டுக் கதவை உடைத்து நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகே மாதாகோட்டை சாலை ஜேம்ஸ் நகரைச் சோ்ந்த ராஜா மனைவி அப்ரோஸ் பேகம். இவா் அண்மையில் வீட்டை பூட்டிவிட்டு மேலத்திருப்பூந்துருத்திக்குச் சென்றாா். மீண்டும் இவா் செவ்வாய்க்கிழமை (நவ.30) வீட்டுக்குத் திரும்பியபோது, முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் நகைகள், ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.