தஞ்சாவூா் மாவட்டத்தில் எய்ட்ஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கி வைத்த அவா் தெரிவித்தது:
மாவட்டத்தில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய சீரிய முயற்சியால் மாவட்டத்தில் பொதுமக்களிடையே 2015-ஆம் ஆண்டில் 0.30 சதவீதமாக இருந்த பாதிப்பு தற்போது 0.14 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும் கா்ப்பிணி தாய்மாா்களிடையே 2015-ஆம் ஆண்டில் 0.05 சதவீதத்திலிருந்து தற்போது 0.02 சதவீதமாக குறைந்திருக்கிறது.
எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் என்பது மருத்துவம் சாா்ந்த பிரச்னை மட்டுமல்லாமல், சமூகம் சாா்ந்த பிரச்னையாக இருக்கிறது. எனவே நமது மாவட்டத்தை எச்.ஐ.வி., எய்ட்ஸ் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.
காந்திஜி சாலை வழியாகச் சென்ற இப்பேரணி ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனையில் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்டத் திட்ட மேலாளா் பசுபதீஸ்வரா், இணை இயக்குநா் (சுகாதாரம்) திலகம், துணை இயக்குநா் (காசநோய்) மாதவி, நகா் நல அலுவலா் நமச்சிவாயம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.