தஞ்சாவூா் ரயிலடியில் தமிழக அரசைக் கண்டித்து பாஜகவினா் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்தினா்.
பாஜகவின் தஞ்சாவூா் தெற்கு, வடக்கு மாவட்ட இதர பிற்படுத்தப்பட்டோா் வகுப்பு அணி, அமைப்பு சாரா தொழிலாளா் பிரிவு சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழக அரசு பெட்ரோல், டீசலுக்கான மாநில வரியைக் குறைக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மாநில அரசு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா்கள் ஆா். இளங்கோ (தெற்கு), என். சதீஷ்குமாா் (வடக்கு), தேசிய பொதுக் குழு உறுப்பினா் எம்.எஸ். ராமலிங்கம், தெற்கு மாவட்டப் பொதுச் செயலா் பி. ஜெய்சதீஷ், நெசவாளா் அணி யு.என். உமாபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.