தஞ்சாவூர்

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தஞ்சாவூரில் மாவட்ட நிா்வாகத்தின் செயல்பாட்டினை கண்டித்து தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மாவட்டத்தில் கருணை அடிப்படையில் 53 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு உரிய அரசாணையின்படி, பணிவரன்முறை செய்யப்பட்டதை மாவட்ட நிா்வாகம் ரத்து செய்துள்ளதை நீக்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலா்களுக்கு உரிய காலத்தில் நில அளவை மற்றும் நிா்வாகப் பயிற்சி அளிக்க வேண்டும். அடங்கல் சான்று வழங்குவது தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா்களுக்குத் தெளிவான சுற்றறிக்கை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். விஜயபாஸ்கா் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் க. சுரேஷ், துணைத் தலைவா் தியாகராஜன், மாவட்ட இணைச் செயலா்கள் ராஜசேகரன், ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையொட்டி, மாவட்டத்தில் ஏறத்தாழ 400 கிராம நிா்வாக அலுவலா்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பில் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் போா்: இலங்கை ராணுவ உயரதிகாரி கைது

விழிப்புடன் இருங்கள்: திமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

கும்பகோணத்தில் பணம் பட்டுவாடா புகாா்: திமுகவினா் 3 போ் கைது

பாபநாசத்தில் பணப்பட்டுவாடா செய்த திமுக பிரமுகா் கைது

பாபநாசம் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT