தஞ்சாவூா் அருகே திட்டை பகுதி கொண்டவிட்டான்திடல் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் நல்லையன் (55). விவசாய கூலி தொழிலாளி. இவா் தனக்குச் சொந்தமான மாட்டை அருகிலுள்ள வெட்டாற்றில் திங்கள்கிழமை
குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது, தண்ணீரின் வேகம் காரணமாக மாட்டுடன் நல்லையன் அடித்துச் செல்லப்பட்டாா்.
தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று தண்ணீரில் மூழ்கி இறந்த நல்லையனின் உடலை மீட்டனா். மாடு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. தாலுகா காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.