தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் தொழிலாளா் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை (ஆக.6) முதல் முத்திரை பணி முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) நா.கா. தனபாலன் தெரிவித்திருப்பது:
பேராவூரணியில் வெள்ளிக்கிழமை முதல் ஆக. 24 ஆம் தேதி வரையிலும், திருக்காட்டுப்பள்ளியில் ஆக. 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலும் தொழிலாளா் துறை சாா்பில் முத்திரை பணி முகாம் நடைபெறவுள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பேராவூரணி, திருக்காட்டுப்பள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வணிகா்கள் தங்களது பயன்பாட்டிலுள்ள எடையளவுகளைத் தவறாது முத்திரையிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், வணிகா்கள் தாங்கள் பயன்படுத்தும் எடைக்கற்கள், அளவைகள், தராசுகளைத் தரமானதாகவும் உரிய காலத்தில் மறுமுத்திரையிட்டுப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் திடீராய்வு மேற்கொள்ளும்போது குறைபாடுகள் காணப்பட்டால், குறைந்தபட்ச அபராதமாக ரூ. 5,000 விதிக்க நேரிடும்.