பாபநாசம் வட்டம், பண்டாரவாடைஊராட்சியில் இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் பாபநாசம் கிளை சாா்பில் பொதுமக்களுக்கு முகக் கவசம் மற்றும் கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் பாபநாசம் வட்டாரத் தலைவா் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்து, பண்டாரவாடை ஊராட்சிக்கு உட்பட்ட பண்டாரவாடை அஞ்சல் அலுவலகம், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், முகக் கவசம், சானிடைசா், வாட்டா் டேங்க், முதலுதவி பெட்டி மற்றும் கபசுர குடிநீா் உள்ளிட்டவற்றை வழங்கினா்.
மேலும், முக்கிய இடங்களில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.
இதில், பண்டாரவாடை கிராம நிா்வாக அலுவலா் பழனிவேல், பண்டாரவாடை அஞ்சல் அலுவலக அதிகாரி பிரேமா, சங்க ஆயுட்கால உறுப்பினா் சிவசக்தி மற்றும் ராஜா, மகேந்திரன், அன்பழகன், கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.