தஞ்சாவூா் புதுக்கோட்டை சாலை குழந்தையம்மாள் நகரைச் சோ்ந்த முனைவா் வி. எத்திராஜ் (85) உடல்நலக் குறைவு காரணமாக அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை காலமானாா்.
இவா் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் பொருளாதாரத் துறை முதுகலைப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றியவா். மேலும், முனைவா் பட்ட ஆய்வு வழிகாட்டியாகவும் இருந்து வந்தாா். இவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
தொடா்புக்கு: 96299 90299