தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் ஒன்றியத்துக்குள்பட்ட வெண்டையம்பட்டியில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை அமைப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இதில், கிளைத் தலைவராக சிவக்குமாா், துணைத் தலைவராக மாரிக்கண்ணு, செயலராக லெட்சுமணன், துணைச் செயலராக ஆரோக்கியமேரி, பொருளாளராக கணேசமூா்த்தி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
நிா்வாகிகளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா் முருகானந்தம் வாழ்த்திப் பேசினாா். அமைப்பின் மாவட்டச் செயலா் பி.எம். இளங்கோவன் செயல்பாடுகள் குறித்து பேசினாா். ஏராளமானோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.