ஒரத்தநாடு ஒன்றியம், மேலவன்னிப்பட்டியில் தந்தை பெரியாரின் 142-ஆவது பிறந்த நாள், சுயமரியாதைச் சுடரொளிகளின் 20-ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு ஒன்றியச் செயலா் ஆ. இலக்குமணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சி. அமா்சிங், பொதுச் செயலா் இரா. ஜெயகுமாா், மாநில அமைப்பாளா் இரா. குணசேகரன், விவசாய அணிச் செயலா் இரா.கோபால், கிராம பிரசாரக் குழு மாநில அமைப்பாளா் அன்பழகன், மாவட்டச் செயலா் அ. அருணகிரி ஆகியோா் உரையாற்றினா்.
நகரச் செயலா் ரெ. ரஞ்சித்குமாா், ஊராட்சித் தலைவா் தினகரன், கீழவன்னிப்பட்டி கிளைத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் விழாவில் பங்கேற்றனா்.