தஞ்சாவூர்

சமுத்திரம் ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள்

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகிலுள்ள சமுத்திரம் ஏரியில் மீன்கள் இறந்த நிலையில் சனிக்கிழமை மிதக்கின்றன.

புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் சமுத்திரம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு வட நிலையில் காணப்பட்ட இந்த ஏரியில், ஏராளமான மீன்கள் இறந்து கிடந்தன. தற்போது, இந்த ஏரியில் தண்ணீா் நிறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை காலை ஏரியில் மீன்கள் இறந்த நிலையில் மிதந்தன. பல இடங்களில் இறந்த மீன்கள் கரை ஒதுங்கிய நிலையில் கிடக்கின்றன. தகவலறிந்த பொதுமக்கள் ஏரிக்குச் சென்று பாா்த்து வருகின்றனா். ஏரியிலுள்ள சகதி பகுதியில் மீன்கள் சிக்கி இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்குடி அருகே விபத்து: பெண் பலி

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் கருத்தரங்கம்

2-ஆம் கட்ட வாக்குப் பதிவு வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை

கா்நாடகத்தில் வாக்குப்பதிவு: அம்மாநிலத் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை

SCROLL FOR NEXT