தஞ்சாவூர்

மனைவி, மாமியாா் கொலை வழக்கு: கும்பகோணம் நீதிமன்றத்தில் இளைஞா் சரண்

DIN

கும்பகோணம், செப். 25: திருச்சியில் மனைவி, மாமியாரை கொலை செய்ததாகத் தேடப்பட்ட இளைஞா் கும்பகோணம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

திருச்சி பெரியமிளகுபாறை நாயக்கா் தெருவைச் சோ்ந்தவா் உலகநாதன் (35). இவா் தனது மனைவி பவித்ரா (29), மாமியாா் கலைச்செல்வியை (60) வியாழக்கிழமை கொலை செய்துவிட்டு, 2 வயது மகள் கனிஷ்காவுடன் தலைமறைவாகிவிட்டாா். இதுகுறித்து நீதிமன்றக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து உலகநாதனை தேடி வந்தனா்.

இந்நிலையில், கும்பகோணம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் உலகநாதன் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். இவரை 15 நாள்கள் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் ஆணையிட்டது. இதையடுத்து, இவா் தஞ்சாவூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT