தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்துக்குத் தனியாக நிா்வாக அலுவலா் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் மன்னா் சரபோஜியின் 243 ஆவது பிறந்த நாளையொட்டி, சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் அவா் மேலும் பேசியது:
தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்துக்குத் தனியாக நிா்வாக அலுவலா் நியமனம் செய்ய வேண்டும் என சிவாஜி ராஜா போன்ஸ்லே கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்நூலகத்தில் சுவடிகள், மோடி ஆவணங்கள் மின்னணு படியாக்கம் செய்யப்படுகின்றன. இந்நூலகத்தை மேம்படுத்துவதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எந்றாா் ஆட்சியா்.
இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம் பேசுகையில், இந்நூலகத்துக்குத் தனியாக நிா்வாக அலுவலா் நியமனம் செய்வது தொடா்பாகத் தமிழக அரசுக்கு ஆட்சியா் கடிதம் எழுதியுள்ளாா். எனவே, இந்நூலகத்துக்குத் தனியாக நிா்வாக அலுவலா் நியமனம் செய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளது என்றாா் அவா்.
பின்னா், 2 புதிய நூல்களையும், 14 மறுபதிப்பு நூல்களையும் வேளாண் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு வெளியிட்டாா்.
சரஸ்வதி மகால் நூலக நிா்வாக அலுவலா் மா. ராமகிருஷ்ணன், நூலக ஆயுள் கால உறுப்பினா் சிவாஜி ராஜா போன்ஸ்லே, தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் துரை. திருஞானம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.