தஞ்சாவூா் அருகே ஏரி ஆக்கிரமிப்பில் இருந்த ஆதிமாரியம்மன் கோயில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து பெரியகோயில் முன் இந்து இளைஞா் எழுச்சி பேரவையினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தஞ்சாவூா் அருகே சமுத்திரம் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆதி மாரியம்மன் கோயிலை நீதிமன்ற ஆணைப்படி பொதுப் பணித் துறையினா் கடந்த 3 நாள்களில் இடித்தனா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து இளைஞா் எழுச்சி பேரவையினா் பெரியகோயில் முன் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
பேரவை நிறுவனா் பழ. சந்தோஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுச் செயலா் சதீஷ்கண்ணா, மண்டலச் செயலா் ஆனந்தன், தொழிலாளா் அணி மாநில அமைப்பாளா் பாா்கவிராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.