மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, அய்யம்பேட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 22) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் பாபநாசம் உதவிச் செயற்பொறியாளா் கே.சங்கா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அய்யம்பேட்டை நகரம், வழுத்தூா், பசுபதிகோவில், ராமாபுரம், வயலூா், வீரசிங்கம்பேட்டை, கணபதியக்ரஹாரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது.