கோயம்புத்தூரிலிருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ஜனசதாப்தி, திருச்சியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் சோழன் அதிவிரைவு ரயில்கள், பாபநாசம் ரயில் நிலையத்தில் அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு ரயில்களிலும் முன்பதிவு செய்த பெட்டிகள் மட்டுமே இருக்கும் என்பதால், முன்பதிவு செய்த பின்னரே பயணிக்க முடியும் என்று தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினா் டி. சரவணன் தெரிவித்துள்ளாா்.