தஞ்சாவூர்

கல்லணைப் பாலப் பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், கல்லணைப் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, கல்லணையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கல்லணையில் ரூ. 58 கோடி மதிப்பில் 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டத் தொடங்கப்பட்ட கல்லணை- கொள்ளிடம் புது பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஆள்கொல்லி பாலமாக கல்லணைப் பாலம் மாறுவதைத் தடுக்க, தடுப்புக் கைப்பிடி அமைத்துத் தர வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியக் குழு உறுப்பினா் எம். ரமேஷ் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வெ. ஜீவகுமாா், பூதலூா் வடக்கு ஒன்றியச் செயலா் கே. காந்தி கண்டன உரையாற்றினா்.

ஒன்றியக் குழு உறுப்பினா் எம். பாஸ்கரன், கிளைச் செயலா்கள் எம். அகிலா, குழந்தைவேலு, பன்னீா்செல்வம், நிா்வாகிகள் முருகேசன், சந்திரா, உதயகுமாா் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT